மனித வஞ்சத்தையோ.

.த.ராஜ்சுகா-இலங்கை-

அன்னைக்கு அடக்கமானவள்
தந்தைக்கு அன்பானவள்
குடும்பத்துக்கு பொறுப்பானவள்
கூடப்பிறந்ந்தாருக்கு குதூகலமானவள்…
நண்பர்களுக்கு வெகுளியானவள்
நாளும் பழகுபவர்க்கு இனிமையான‌வள்
நம்பிக்கைக்கு தகுதியானவள்
நவநாகரிகத்தில் தூரமானவள்…
துன்பத்தில் துவண்டுவிடுபவள் -அது
தூரப்போகுமுன்னே எழுந்திடுபவள்
சின்னதற்கும் கலங்கிடுபவள்
சீக்கிரமாய் ஓய்ந்திடாதவள்…
மாணாக்கருக்கு கண்டிப்பானவள்


மாப்பிள்ளையருக்கு அழகில்லாதவள்
மாமியாருக்கு சொத்தில்லாதவள்
நாத்தனாருக்கோ நாகரிகமில்லாதவள்…
ஏட்டறிவினை எட்டிடாதவள்
ஏழ்மையதை விர‌ட்டிடாதவள்
பாவறிவை கொஞ்சம் பார்த்தவள்
பாடியவழி நடக்க‌க நினைப்பவள்
உறவின் மாயை உணராதவள்
உள்ளத்தின் வஞ்சம் அறியாதவள்
மறவா நெஞ்சம் கொண்டவள்
மனித வஞ்சத்திலோ தெளிந்தவள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *