சிறை

விஜயலட்சுமி சேகர் ( மட்டக்களப்பு, இலங்கை)

அரசியல்வாதியன்
சிறைப்படுகையில்
எழுதப்படுவது
சரிதம்…
பிறந்தது
படித்தது
கைப்பிடித்தது…

அடிக்கல் வாங்கிய கதிரை
கௌரவமாகும்
சிறைக் கதவுகளும்
பேசும்
அவன் சுய சரிதம்
அரசியல்வாதியாள்
ஒருத்தி
அடைபடுகையில்
நீட்டப்படும்
நாக்குகள்
எண்ணப்படும்
அவள்
கழட்டியசிலிப்பர்
உள்ளாடைகள்
சிக்கியதலையின் கிளிப்புகள்
சேலையின் தலைப்புகள்

அரசியல் மேடையில்
கல்குலோட்டர்கள்
விற்பனையாகும்.

ஜெயலலிதாவின் சிறையின் பின் எழுதியது )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *