நினைவைத் தாக்கிய செய்தி -அவருக்கு எமதுஇறுதி கண்ணீர் அஞ்சலிகள்! .

எமது புகலிட அரசியல் இலக்கிய வாழ்வில் நாம் அவர்களுடன் அல்லது எம்முடன் பயணித்த பலரை இன்று இழந்து நிற்கிறோம் ஒவ்வொருவருடைய இறப்பும் எம்மை பலவீனப்படுத்தி ,பலப்படுத்திச் செல்கிறது. எம்சியின் இறப்பும் எதிர்பார்க்காத ஒன்று; .கடைசிவரைக்கும் அரசியல் இலக்கியமென்று இயங்கிக்கொண்டிருந்தவர்; டென்மார்க்கில் நடெபெற்ற ஊடறு +விடியலினால் வெளியிடப்பட்ட பெயரிடாத நட்சத்திர புத்தக விமர்சன நிகழ்ச்சியில் பங்குபற்றி தனது ஆய்வுரையை வழங்கியிருந்தார்.அவருடைய வாழ்வுக்கு என்றும் உறுதுணையாக இருந்த அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் பிரிவு தரும் துயரில்  பங்குகொள்கிறது ஊடறு. அவருக்கு எமதுஇறுதி கண்ணீர் அஞ்சலிகள்! .

கவிஞர் எம்.சி.லோகநாதன் அவர்கள் விமர்சன உரை ஆற்றுகிறார் -http://www.oodaru.com/wp-content/uploads/2012/04/6-MCLoganathanpart-2.wav

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *