ஆண்மை அறக் கடவது….!

-ஆதிலட்சுமி

யாழ்.காரைநகர் ஊரி கிராமத்தில் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரு சிறுமிகளின் (11இ 09) சம்பவத்தையொட்டி எழுதப்பட்ட கவிதை இது-

—–

ஊரியில் என் குழந்தையின்

குழந்தைமையை தின்றவர்களே…

உரத்த குரலில்

உங்களை நோக்கி சாபமிடுகிறேன்…

பற்றி எரியும் என்

பெற்ற வயிற்றில் இருந்து

கொள்ளி எடுத்து உம்மீது எறிகிறேன்…

பற்றி எரியட்டும் உங்கள் காமம்..

தொலையட்டும் இன்றோடு உங்களின்

பாலியல் வெறி…

பாலியல் தேவை மனிதஇனத்துக்கு தேவை..

ஆனால் உங்கள் காமவெறி

ஓர் இனத்துக்கும் தேவையற்றது…

மரங்களை சாய்க்கையில்

பார்த்திருந்தேன் என்பதற்காய்..

ப+க்களையும் பிய்த்தெறிகிறீர்களா…

பாருங்கள்….பாருங்கள்…..

உங்களை நோக்கி சாபமிடுகிறேன்…

வெற்று வார்த்தைளில்லை இவை

வெந்துகொண்டிருக்கும் என்

நெஞ்சிலிருந்து வெடிக்கும் சாபம்.

வெறி சுமந்து திரியும்

உங்கள் ஆண்மை அறக்கடவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *