தலைப்பிலி கவிதை

த.எலிசபெத் -(இலங்கை)

காதலிக்கவென்றால் ஒரு
பொண்ணுமட்டும் தேவை -அவளை
கல்யாணம் கட்டவேண்டுமென்றாலோ

அழகிருக்கனும் கொஞ்சம்
அந்தஸ்துமிருக்கனும்

படித்திருக்கனும் லேசாய்
பளபளப்புமிருக்கனும்

தொழிலிருக்கனும் அதிலும்
கொழுத்த வரவிருக்கனும்

மெலிவாயிருக்கனும் மேனி
பொழிவாயுமிருக்கனுமாம்

ம்ம்ம்ம்
இதுக்குத்தான் சொன்னார்களோ

காதலுக்கு கண்ணில்லையென்று??

அப்போ
கண்ணை மூடிக்கொண்டா காதலிக்கின்றார்கள்

அப்படியென்றால்
எதனை காதலிக்கின்றார்கள்??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *