தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் இலங்கை

என்னுடைய பொழுதுகளை
யாரும் பறிக்காதீர்கள்
யாருக்கும் தொந்தரவு கொடுக்கா
என் பொழுதுகளை
யாரும் பறிக்காதீர்கள்

என் புன்னகைக்கும் கவலைக்குமான
பொழுதுகளை என்னிடமிருந்து யாரும் பறிக்காதீர்கள்
எனக்கான பகல்கள்
எனக்கான இரவுகள்  அத்தனையையும்
எனக்கே தந்து விடுங்கள்

எனக்கான இரவுகள்
இன்னமும் உறங்கவில்லை
அவ் இனிய இரவுகளை
உறங்கச் சொல்லி யாரும்
கட்டாயப்படுத்தாதீர்கள்

என் மழைக் கால இரவுகளையும்
நிலாக் கால இரவுகளையும்
என்னிடமிருந்து பிடுங்கி விடாதீர்கள்

என் உடலின் வடிவங்களை
எனக்கு கொடுத்தவர் தாம் யாரோ?
எனக்கான கைஇகால்இதலையைச்
செதுக்கியவர் தான் ஆரோ?

இதற்கிடையில்…
கை எனக்கு இ
கால் உனக்குஇ
தலை வேறொருவனுக்கென
பங்கு போட்டு பசி தீர்க்கும்
நர உண்ணிப் பிரியர்கள்-செயல்
அடக்க குரல் கொடுக்கும்
என் தாகம் தணிக்காதீர்!
என் குரலை அடக்காதீர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *