இசைப்ரியா பற்றிய புதிய த ஆதாரங்களை செனல் 4 காணொளி வெளியிட்டுள்ளது

இசைப்ரியா பற்றிய புதிய த ஆதாரங்களை செனல் 4 காணொளி வெளியிட்டு உலகை மீண்டும் திடுக்கிட செய்துள்ளது.

புலிகளின் போராளி கர்ணல் இசைப்ரியா சமரில் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு ஆரம்பத்தில் சொல்லி வந்தது.

எனினும் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணப்படுத்தப்பட்ட அவரது சடலத்தின் புகைப்படங்கள் வெளியாகி அரசின் கூற்றை தகர்த்தது. அவரது உடல் கிடந்த நிலைமை அவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார் என்பதையும் கோடிட்டு காட்டியது. அது எப்படி, கொல்லப்பட்ட சடலத்தின் கைகள் பின்னால் கட்டப்பட்டு இருக்க முடியும் என்ற உலகின் கேள்விகளுக்கு பதில் கிடைக்காத நிலையில் இன்று புதிய திடுக்கிடும் ஆதாரம் கிடைத்துள்ளது.

இன்று வெளியாகியுள்ள புதிய ஆதார காணொளியில், சேறு நிரம்பிய வாவியில் உயிருடன் விழுந்து கிடக்கும் இசைப்ரியாவை எழுப்பி படையினர் அழைத்து வருகிறார்கள். அலங்கோலமான அவரது உடலின் ஒரு பகுதியில் ஒரு வெள்ளை துணி போர்த்தப்படுகிறது. அவரை நடத்தி வரும் இராணுவத்தினர் அவரை “பிரபாவின் மகள் (துவாரகா)” என்று சிங்களத்தில் சொல்லுவதும், அதற்கு இசைப்ப்ரியா “ஐயோ, நான் அவர் (துவாரகா) இல்லை” என தமிழில் குளறுவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்த பெண்ணின் கைகள் பின்னால் கைகள் கட்டப்பட்டு, கொல்லப்பட்ட நிலையிலான அவரது அரை நிர்வாணப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகின. இந்நிலையில் இசைப்ரியா உயிருடன் பிடிக்கப்பட்டார் என்பது இன்று உறுதியாகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *