நாங்கள் நாய்களைவிட கேவலமானவர்களா ??”

அசாமில்
ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற

பெண்ணை அம்மணமாக்கி அடித்து உதைத்து
விரட்டி அடித்தனர் சாதி வெறி பிடித்த இந்துக்கள் ..!!

“சாதி இந்துக்களால்  அம்மணமாக்கி  அவமானம் படுத்தப்பட்டு வீதி வீதியாக அடித்து விரட்டப்பட்டு
மேல் சாதி வெறியர்கள் ஒருவர் விடாமல் உதைத்து  சாதி வெறிக்கு இரையான
லக்ஷ்மி ஓரான் சொன்னது இது தான் …

“நான் மிகுந்த அவமானத்தில் இருக்கிறேன்  இந்த அவமானத்தை என்னால்  என் வாழ்கையின் எந்த காலகட்டத்திலும் மறக்கவே முடியாது …

ஆதிவாசிகள் உரிமைகளை கேட்பது தவறா .. ??மனிதர்களாக மதிக்கப்படவேண்டும்
என்று விரும்பியது தவறா .. ?? வீதியில் நாய்கள் நுழைந்தால் கூட  ஒன்றும் செய்யாத மேல் சாதியினர் நாங்கள் நடந்ததும் எங்களை  கேவலமாக அடித்து விரட்டுவது ஏன் ??
நாங்கள் நாய்களைவிட  கேவலமானவர்களா ??” “நான் தற்கொலை செய்துகொள்ள
யோசிக்காத இரவே இல்லை… ஆனால்  என்னை நம்பித்தான் என் குடும்பம்
இருக்கிறது.. அந்த குடும்பம் எப்போதும் போல  வறுமையில் தான் இருக்கிறது …
அதை காப்பாற்றத்தான் நான்  அவமானத்தை மறந்து  வருமானத்திற்க்காக இன்று
செக்யுரிட்டி வேலை பார்கிறேன் ..!!”

2 Comments on “நாங்கள் நாய்களைவிட கேவலமானவர்களா ??””

  1. இது இந்திய பெருஜனநாயகத்தினுடைய கையாளாகாதனத்தின் சிறு கூறுமட்டுமே. இதை சட்டங்களால் தடுக்க முனைவது தற்காலிக நிவாரணமாகவே அமையும்.இந்த மிருகத்தனங்களுக்கு ‘வன்முறைதர்மம் ‘ஒன்றை தவிர மக்களிடையே வேறு தெரிவுகள் இல்லை. மக்களுக்காக அதை கையிலெடுக்கும் எந்த இயக்கத்தோடும் மக்கள் அணிதிரள்வதை வேறு எந்த நியாயங்களுக்காகவும் குறைகூற முடியாது.

  2. சாதிகளின் துயரம் என்னவென்று இவர்களுக்கு எப்படி தெரிய போகிறது!
    இவர்கள் அந்த சாதியில் பிறந்து இருந்தால் அல்லவா இவர்களுக்கு அதன் வலி தெரிய போகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *