தலைப்பிலி கவிதை

 யாழினி யோகேஸ்வரன்(இலங்கை)

 எனது சிரிப்புக்கள் நிரந்தரமற்றவை
நான் நிற்கின்ற போது,
நடக்கின்ற போது,
பேசுகின்ற போது,
எல்லோரிடத்திலும் சிரிக்கின்றேன்.
நான் தூங்குகின்ற போது,
அழுகின்ற போது,
சிந்திக்கின்ற போது,
எனக்குள் சிரிக்கின்றேன்.
நான் இறக்கின்ற போது….
எங்கனம் சிரிப்பேன்???
ஆதலால்
எனது சிரிப்புக்கள் நிரந்தரமற்றவை..
இறப்பின் பின்னும் என்னால் சிரிக்க முடிந்தால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *