நிலாச்சோறில் பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள்

PeyaridathaNadsathirankal s

நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி – 21.10.2011 வெள்ளிக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 06.00 மணி முதல் 08.30 வரை – இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 மணி முதல் 01.00 வரை

பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள்

21.10.2011 வெள்ளிக்கிழமை 

பிரித்தானிய நேரம் மாலை 06.00 மணி முதல் 08.30 வரை – இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 மணி முதல் 01.00 வரை

இலத்தீனமெரிக்க-ஆப்ரிக்க பெண் போராளிகளின் கவிதைத் தொகுதிகள் உலக மொழிகளில் நிறைய வெளியாகி இருக்கின்றன. மிகச்சிறு வட்டங்களில், குறுகிய சுற்றில் மட்டுமே இதுவரை இருந்துவந்த ஈழவிடுதலைப் பெண் போராளிகளின் கவிதைகள் முதன் முதலாக ஒரே தொகுப்பாக வெளியாகி இருக்கிறது. 160 பக்கங்களில் பெண்ணிய இணைய சஞ்சிகையான ஊடறுவும், தமிழகத்தின் புகழ்வாய்ந்த பதிப்பகமான விடியலும் இணைந்து பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் பெயரில் இந்நூலினைப் பதிப்பித்திருக்கிறார்கள். சொல்லாத சேதிகள் துவங்கி பெயரிடாத நட்சத்திரங்கள் வரை ஈழக் கவிதைகளின் பன்முகத் தோற்றங்களும் வளர்ச்சியும் குறித்ததாக இந்த வாரத்தின் நிலாச்சோறு நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

 

.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *