சருகாகி…

பிறெளவ்பி (மட்டக்களப்பு, இலங்கை )  

முடியாது என்ற பின்பும் முயல்கின்றேன் !
மனதில் ஒருத்தி மஞ்சத்தில் ஒருத்தி ….
 ஜீரணித்து கொள்ளலாமோ ?

 காரணமில்லா காரியங்களை வகுத்து கொண்டு
மனசெல்லாம் உன் நினைவுகள் நிறைந்திருக்க
மீண்டும் தனிமையை பரிசளிக்கிறாய் !
நிஜ பிரியத்தை நியாயம் கோரி நிராகரிக்கிறாய்…..
மனம் வெந்து வடிகின்ற  கண்ணீர் கூட
பாசாங்காய் தெரிகின்ற போது
எங்கனம் புரிந்து  கொள்வாய் பிரிதலின் மீதான வலிகளை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *