யாழினியின் தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு, இலங்கை)
 
இரவுகளே விழித்திருங்கள்
என்
சிந்தனைக்குமிழிகள் வெளிவரா வண்ணம்
கண்ணீர்த்துளிகள் தலையணையுடன் உறவு கொண்டாடாமல் இருக்க
பயம் கொண்ட மனச் சுமையை அறியாதிருக்க
என் மூச்சுக் குழாய்கள் நெருடாமலிருக்க
பற்களெல்லாம் புன்னகை பூச்சை மெழுகி இருக்க
 வாழ்வின் வெளிச்சத்தை என்றுமே நன் கண்டு கொள்ள
இரவுகளே விழித்திருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *