விஜயலக்சுமியின் தலைப்பிலி கவிதை

விஜயலக்சுமி சேகர் மட்டக்களப்பு இலங்கை

இப்பொழுதெல்லாம்
பாதுகாப்பைப் பலப்படுத்தும்
எங்கள்
வாசற் கதவுகள்
திறந்தே கிடக்கின்றன.

எனினும் இன்று வரை
உள்ளே வருவது
தெரு வாகனத்தின்
புழுதிக் காற்றும்
வெளியே செல்வது எங்களது
சூடான ஏக்கப் பெரு மூச்சுமே

2 Comments on “விஜயலக்சுமியின் தலைப்பிலி கவிதை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *