இலங்கையின் மலையகப் பெண் படைப்பாளிகளின் படைப்புகளை மட்டுமே தாங்கி, ஊடறு வெளியீடாக வெளிவந்திருக்கிறது ‘மலையகா’ என்னும் சிறுகதைத் தொகுப்பு.– ஒரு படைப்பாளியின் இரண்டு சிறுகதைகள் தவிர மற்றவை அனேகமாக மலையகத் தொழிலாளர்களின், வறுமை, அறியாமை, முதலாளித் துவத்தின் கீழ் அடிபணிய நிர்ப்பந்தமாகும் தாழ்வு நிலைகளையும் அதனாலான வாழ்வின் பாடுகளையுமே பேசியிருக்கின்றன.
ஒவ்வொரு கதையும் அவை படைக்கப்பட்ட காலப்பகுதிக்கமைந்த வாழ்வின் சூழலையும் பிரச்சனைகளையும் பாசாங்கற்ற, எளிமையான மொழிநடையில் பேசியிருப்பதை அவதானிக்க முடிகிறது. பலவருடங்களின் முன்பு படைக்கப்பட்ட கதைகளையும், தற்போது உயிருடன் இல்லாத படைப்பாளியின் படைப்புகளையும் கூடத் தேடித் தொகுக்கப்பட்டத்ன் நோக்கம் அவர்களின் படைப்பாக்கங்களை ஆவணமாக்கிவிடும் முயற்சியாக இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. அந்த முயற்சிக்காக ஊடறுவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். கூடவே படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்தும் அதே நேரம் எமது பிரச்சனைகளை எம்மால் மட்டுமே தீர்க்கமாக வெளிக்கொணர முடியும் என்பதால் , நீங்கள் இத்துறையிலிருந்து வெளியேறியிருந்தாலும் மீண்டும் உங்கள் படைப்பூக்கத்தைத் தொடர வேண்டுகிறேன் . மாலினி 19.05.24நன்றி
ஜேர்மனி