“பிறெளவ்பி” யின் (மட்டக்களப்பு) இரு கவிதைகள்

துருவம் 

விலகாத இருள் ஒளிர

ஊடுருவும் கண்கள் அச்சமின்றி

அங்கலாய்புடன் விரிகின்றன.

வாழ்க்கைக் கூண்டில் அபத்தம் வேரூன்றிற்று!

சுற்றி வர ஏதேதோ ரகசியங்கள்

சுமந்து நழுவ…வார்த்தைகளின் சித்திரம்

வரையறுக்கப்பட்ட சப்தத்தில்

முடிவில்லா அதிகாரம் தொனிக்க

தீராத ஏக்கத்தினுள்

புரிந்து கொள்வதன் அந்நியம்

மரணத்தினுள் தொடர்பாகி நிற்கின்றது!

அன்று பலி பல கேட்டு

வினை சில புரிந்து

உருவேற்றிய பூசாரி

உடனில்லாது புறப்பட

அன்பம் சிவமும் இரண்டாகின்றது இன்று!

 தலைப்பிலி கவிதை

விருப்பு வெறுப்பற்று
விரக்தி  மட்டுமே – படிந்துள்ள
எஞ்சி நிக்கும் இறுதி வாழ் நாட்களினுல்
சிந்தையேல்  இன்னும் ஜீரணம் மாகாமல் நின்று
வன்மையை கிளரும் வார்த்தை படிமங்களால்
பழிவாங்கும் உணர்வுகளே ஊரிநிட்கின்றன!
உண்மை உயர் நீத்து நீண்ட காலமாகி விட்டது
எண்ணங்களும் ஏக்கங்களும்    ஏமாரங்களாகி  நிற்க
பாசம் துரா விலகி துவேசங்கள் வெளிப்பட
யாதுமற்ற வெளியில்  கருணை கொலைக்காய்
காத்திருகிறது உடைந்த உள்ளமொன்று.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *