கனவை தேடி – டினோஜா நவரட்ணராஜா

அமிழ்ந்து கொண்டிருக்கும்
ஞாமங்களோடிணைந்து
மூழ்கிக்கொண்டிருக்கிறது
முன்னிரவுக்கனாக்கள்

புத்தகப்பை வலியுணர
தோள்களிங்கே துடித்தாலும்
முதுகுத்தண்டையழுத்தும்
சீமெந்துப் பாரமதை
இறக்கி வைக்க இடமெங்கே

தொலைந்து கொண்டிருக்கும்
தொலைதூரக் கனவுகளை
துரத்திப்பிடித்து விட
சப்பாத்துக் கால்கள் கேட்டேன்
கல்லில் தோய்கிறதென்
கட்டைவிரல் செங்குருதி

புன்னகைக்கிறேன் நான்
குறுகுறுவென நீங்கள்
பசிவயிறோ பாரமில்லை
பாடப்புத்தகம் தருவீரோ..

இன்னும் தேடுகிறேன் _ நான்
இன்னமும் ஓடுகிறேன்
காணவில்லையென் கனவுகளென
கடவுளிடம் மண்டியிடவா…
குழந்தைகள் கடவுள்களென
எங்கோ கேட்கிறதே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *