பெண்ணாகப் பிறந்ததனால்! அல்லது ஒறுத்தல்

– நிறோஷினிதேவி.க –


ஒரு பெண்
மகளாக
சகோதரியாக
காதலியாக
மனைவியாக
தாயாக

தன்னைச் சார்ந்தவர்களுக்காக
தன்னை ஒறுத்தே வாழ்கின்றாள்
வாழப் பழக்கப்படுத்தப்படுகின்றாள்.
பின்தூங்கி முன் எழவேண்டும்
சட்டிபார்த்து உண்;ணவேண்டும்
உடுத்தும் உடைகளில் கவனம்வேண்டும்
வீட்டுவேலைகளை பொறுப்பெடுத்துச் செய்யவேண்டும்
அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும்
மனங்கோணாமல் நடக்கவேண்டும்
இச்சைக்கும் காமத்திற்கும் இணங்கவேண்டும்
பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்க்கவேண்டும்
அடுக்கிக்கொண்டே…….
ஒட்டுமொத்தத்தில்
வீட்டின் கௌரவம் பெண்
சொல்லிக் கொண்டே
பெண்களைப் பாடாய்ப்படுத்துகின்றோம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *