விழிப்பு


சுகந்தி சுப்ரமணியன் கவிதை (1994 மே கிழக்கில் வெளிவந்தது.

இவளின் விழிப்பு
அவர்களுக்கு தொந்திரவாகியது
தூங்கி விட்டாள்
இவளின் கல்வி
அவர்களுக்கு அநாவசியமானது
நிறுத்தி விட்டாள்
இவளின் செலவுகள்
அவர்களுக்கு எரிச்சலூட்டியது
சிக்கனமாயிருந்தாள்
அவளின் பேச்சு
அவர்களுக்கு தொந்திரவாகியது
மௌனமாகிவிட்டாள்
இவளின் கனவுகள்
அவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றுகையில்
கனவு காண்பதை நிறுத்தி விட்டாள்
இவளின் பணிவு
அவர்களுக்கு திருப்தி தருகையில்
இவள் உடைந்து போனாள்
அவர்களுக்கு புரியவில்லை
இவளின் சோகம்
அவர்களுக்கு அலுப்பைத் தர
உணர்வுகளற்றவளானாள்
இவளின் படுக்கையில்
ஈமொய்க்கையில்
இவள் அகதியானாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *