சட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்

இனவாத சக்திகளின் வெறுப்புணர்வின் பிரதான இலக்காக முஸ்லிம் பெண்கள் உள்ளனர். இதனை நீங்கள் எவ்வாறு உணர்கின்றீர்கள்?

உலகில் எல்லா இடங்களிலும் எல்லா இனப் பெண்களுக்கும் நடக்கும் விடயம் தான் இது. பெண் உடலை வைத்து தேசியவாதம் பேசுவது எப்பொழுதுமே நடந்து கொண்டிருக்கின்ற விடயம். இதனை முற்றிலும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஒரு பெண்ணின் உடலை பிள்ளைப் பெறும் இயந்திரமாகக் கருதுவதனையும், யுத்தத்திற்கு ஆட்கள் போதாதா இன்னும் கொஞ்சம் அதிகம் பிள்ளைகளைப் பெற்றுத் தாருங்கள் என்று கூறுவதையும், வன்முறை செய்ய வேண்டுமா பெண்களைப் பிடித்து பாலியல் வல்லுறவு செய்யுங்கள் என்று கூறுவதும் காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. ஒரு சமூகத்தினை பழிவாங்குவதாக இருந்தால் அந்த சமூகத்தினை சேர்ந்த பெண்களே குறி வைக்கப்படுகின்றனர்.

நன்றி தினக்குரல் அவள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *