இறுதி யுத்ததின்போது தமது பிள்ளைகளை கைகளினால் படையினரிடம் வழங்கியபோதிலும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களதெரிவித்தனர்.
இன்று தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லையெனவும் தம்மை அனைவரும் கைவிட்டதாக தாங்கள் உணர்வதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.ஏப்ரல் தாக்குதலை தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு நீதிகேட்ட மக்கள் தம் உறவுகளை தொலைத்துவிட்டு போராடிவரும் மக்களுக்கும் ஆதரவினை வழங்க முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தனர்.