நவம்பர் 25 ஊடறுவும் தமிழ் இலெமுரியா அறக்கட்டளையும் இணைந்து ஈழப் பெண்போராளிகளின் ஊடறு வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள்

 

IMG_5109நவம்பர் 25 ஊடறுவும் தமிழ் இலெமுரியா அறக்கட்டளையும் இணைந்து ஈழப் பெண்போராளிகளின்  ஊடறு வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள் ( இரண்டாம் பதிப்பு) புத்தகத்தின் அறிமுகமும் வெளியீடும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வை செயற்படுத்திய புதியமாதவி அவர்கள் நெறியாளராகவும் செயற்பட்டு இருந்தார். புத்தக அறிமுகத்திற்கு முன்னதாக  இளைஞர்கள் படைத்த நாடகம் மிகவும் உருக்கமாகவும் கண்களில் நீர்கசியும் படியும் ஓர் அரங்க செயற்பாட்டை புதியமாதவியின் நெறியாள்கையில் இளைஞர்கள் மிகவும் உணர்வுடன் அரங்கேற்றினர். பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத்தொகுதியில் வெளிவந்த கவிதைகளை தேர்ந்து எடுத்து அதற்கு அமைய நாடகத்தை உருவாக்கியிருந்தார் புதியமாதவி . புதியமாதவிக்கும் இந் நாடகத்தில் பங்கு கொண்ட மகிழ்ச்சி பெண்கள் அமைப்பினருக்கும் இளைஞர்களுக்கும் தமிழ் இலெமுரியா அறக்கட்டளையினருக்கும் மற்றும் தொடர்ந்து புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டவர்களுக்கும் உரை நிகழ்தியவர்களுக்கும் ஊடறு சார்பாக நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

பெயரிடாத நட்சத்திரத்தின் முதற்பதிப்பில் கிடைத்த பணத்தை போராளிகளின் வாழ்வாதரத்திற்கு கொடுத்ததைப்போலவே இவ் இரண்டாம் பதிப்பில் மும்பை வெளியீட்டில் கிடைக்கப்பெற்ற பணமும் நாம் ஆதரவு சப்போர்ட் மூலமாக போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கியுள்ளோம். என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். அதற்கான பதிவுகளையும் பணம் வழங்கியோரின் பெயர்களும் இங்கு பதிவு செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஊடறு மும்பை பெண்நிலைச் சந்திப்பையும் பெயரிடாத நட்சத்திரங்கள் புத்தகவெளியீட்டின் அறிவிப்புகளை தங்கள் பத்திரிகைகளில் பிரசுரித்து எம்முடன் இணைந்து கொண்ட வணக்கம் மும்பை தினகரன் மகாரஷ்டிரா ஆகிய ஊடகங்களுக்கும் பத்திரிகைளுக்கும் நன்றிகள்.. இவ் புத்தக அறிமுக நிகழ்வுக்காக தன்னலமற்ற உதவிகளை புரிந்த சங்கர் குமணன் நங்கை செல்வி பிரவீனா மற்றும் பெயர் தெரியாத நண்பர்கள் அனைவருக்கும் ஊடறு சார்பாக எமது நன்றிகள்

பல இளைஞர்கள் இந்த புத்தக வெளியீட்டில் கலந்துக்கொண்டது ஆச்சரியமாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருந்தது. குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் எமது நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *