திருநங்கை

மு., ரமேஸ்வரி ராஜா தாப்பா -மலேசியா

நீ புத்தக ஆன்மா
உன்னை படிக்க நிறை இருக்கிறது
அiகுறை வாசிப்புகள்
மேலாட்ட தீர்மானத்தில் வைத்தே
உன்னை குறிப்புகள் எழுதுகிறது.
கடவுளுக்கும் கூட
எத்தனை ஓர வஞ்சனை
ஏன் என்று கேள் !!!
உன்னை மட்டும்
அவனது நெருக்கத்தில் வைத்து
அனுப்பி வைத்திருக்கிறான்
கருணை என்று வரம் பொழுது -நுP
கல்லாக இருப்பதே இல்லை – நுP
அழ நீ சிரிக்கும் போது -உன்
கதறைலை உனக்குள்ளேயே வைத்து
மௌனம் செய்கிறாய் நீ
சிரிக்க பிறர் நகை;கும் போது -உன்


உழைச்சல்களை உனக்கு
மட்டுமே சொந்தம் செய்கிறாய் -உன்
ஒதுங்கலிலும் உன்னை ஒதுக்குவதிலும்
வறட்டு மூளைகள்
வலியையே காட்டுகிறது
வலிகளை காட்டாமல் நீ!
நிஜத்தை ஏமாற்றுவதில்லை-உன்னைதான்
நீ நிஜம் செய்கிறாய்
மீண்டும் சொல்கிறேன்!!
நீ புத்தக ஆன்மா
உன்னை சுவாசிக்க வேண்டும் அல்லது
கிழிக்காமாலாவது உன்னிடத்தில்
இங்கிதம் செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *