தலைப்பிலி கவிதை

-யாழினி யோகேஸ்வரன்-
நிபந்தனைகளற்ற 
விதிமுறைகள்
விலக்க முடியா 
சட்டங்கள்
விரலே இல்லாத 
கூர் நகங்கள்
வீழ்ந்தும் எழுந்துகொள்ள
முடியா கால்கள்
அத்தனை முகங்களும் 
நம் முன்னே
எப்போதும்.
கொத்தாயும்
குலையாயும்
குண்டு போட்டு 
செத்தாலும்,
சொத்தையும்
சுகத்தையும் 
கண்முன்னே 
தொலைத்தாலும் ,

முளையாயும்
தளிராயும்
முகம் காட்டி
முன்னேற
திசையெங்கும் 
வழியுண்டு
திடமான 
மனதுமுண்டு
அத்தோடு  போதாமல்
விழி அறியா
கண்ணீரின் சுவையறிய
நாவில் நரம்புமுண்டு – எம் 
கருகிய நாவில்
நரம்புமுண்டு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *