பூவையர் எழுவது

-த.ராஜ்சுகா -இலங்கை
 
பூக்கள் பிறந்தது பெண்ணாக -அப்
பூவையர் எழுவது தீயாக‌
தாக்கிடும் தீங்கினை அம்பாக -அவர்
தாக்கிடுவார் வேங்கையாக
 
கல்விக்கோலினை ஆயுதமாக -கொண்டு
கடந்திடுவார் உலகினை லாவகமாக -குறை
சொல்லிடும் நாவுகளை அலட்சியமாக‌
பொசுக்கிடுவார் செயல்களாலே
 
அடுப்படிச் சாசனத்தை சாம்பலாக -பொசுக்கி
அகிலம் புகழும் விரமாக‌
இடுப்பொடிந்த கதைகளை கந்தலாக -எங்கும்
இல்லாதொழித்திடுவார் புயலாக‌
 
தவறாக நோக்கிடும் கண்களினை -கூரான‌
விழிகளால் துவம்சிப்பர் வீரராக‌
இறவாத லட்சியத்தினை சுமந்து -நல்ல‌
இலட்சியங்கள் படைப்பர் நேர்த்தியாக…
 

 

1 Comment on “பூவையர் எழுவது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *