தமிழீழம், இந்தியா நட்பு-பகை முரண்கள் வரலாற்று வேர்களுக்குள் புனைவாக விரியும் தமிழ்நதியின் நாவல்

கி.நடராசன் -http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/30978-2016-06-02-03-37-14


tamilnathy-novel

ஈழ விடுதலைப் போராட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலான நீண்டது. பேரினவாத சிங்கள ஆட்சிகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அமைதியான வழிகளில், சட்டபூர்வமான வழிகளில் போராட்டங்கள் தொடர்ந்தன. தேர்தல்களின் தனி ஈழக் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் ஆதரவு அளித்து வாக்களித்தனர். இவை அனைத்தும் எந்த நியாயமான தீர்வையும் ஈழமக்களுக்கு வழங்க வில்லை.  எந்த அரசியல் தீர்வும் ஏற்படவில்லை. மாறாக ஒடுக்குமுறையை வன்முறை வடிவத்திற்கு சிங்கள அரசு நகர்த்தியது.  அந்த வன்முறைகளுக்கு பதிலடி கொடுக்க  கம்யுனிஸ்ட் கட்சி உள்ளீட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தவறுகின்றனர்.  விளைவாக இளஞர்கள் சிறு குழுக்களாக இணைந்து  திருப்பி தாக்க முயன்றனவர்.. விளைவு..1983 ஜீலை படுகொலை..இது ஒரு பண்பு மாற்றத்தை ஈழச் சமூகத்தை உந்தி தள்ளியது. பார்த்தீனியம் நாவலில் தொடக்கம் இங்கிருந்து ஆரம்பித்து 1989 வரை ஈழச்சமூகம் சந்தித்த அனைத்தையும்  படைப்பாக , காட்சி படிமங்களாக, வாழ்வியல் நிகழ்வுகளாக நம்முன் விரிக்கின்றன.

கால இயந்திரம் இன்னும் எட்டப்படாத தொலைவில் உள்ளதொரு அறிவியல் கண்டு பிடிப்பு.. ஓளி வேகத்திற்கு மேல் அதிகமாக செல்ல  கூடிய அறிவியல் கண்டு பிடிப்பு…  அந்த இயந்திரம் சாத்தியமா என்பது தெரியவில்லை.. ஆனால் படைப்பாளிகள், இலக்கியவாதிகள் கால இந்திரத்திற்குள் பயண செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் படைப்புகள் கால எல்லைகளை ஊடறுத்து தெறித்து நிகழ்காலத்தினுடன் இணைக்கின்றன. படைப்பாளிகள்  தங்கள் படைப்பாற்றலால் அதை சாத்திய படுத்துகிறார்கள்.. தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் 1983-90 வரையிலான காலத்தை இன்றைய காலத்துடன் இணைத்துள்ளது. பிரதி பலித்துள்ளது..

பிரதிபலித்தல் என்பது கண்ணாடியில் தெரியும் பிம்பங்களை போல் படைப்பில்  இருக்கவியலாது. அப்படி இருந்தால் அது படைப்பு கிடையாது. அவை வரலாற்றை  எழுதுவதாக,  , நிகழ்வுகளின் விவரிப்புகளாக மாறி விடும். இலக்கியம் அந்த காலத்தின் முழுமையாக குறுக்கும் நெடுக்கும் பயணம் செய்து வாழ்வின் சகல அம்சங்களையும் இணைத்து இழைத்து கோர்க்கப்பட வேண்டும்… வாழ்வின் பொது நிகழ்வுகளும் குறித்த நிகழ்வுகளும், அதில் வாழ்ந்த மனிதர்களின் மனவெழுச்சிகள், மனவேதனைகள் மைய கதையோட்டதுடன் இணைக்கப்பட வேண்டும். அந்த சமூகத்தின் ஆன்மாவைப் படைப்பாளிகள் பிரதிபலிக்க வேண்டும். இங்கு ஆன்மா என்பதை அறிவார்ந்த மனசாட்சி என்ற பொருளில் விளிக்கிறேன்.. ஈழவிடுதலையின் ஆன்மாவை தரிசிக்க புதியதோர் உலகம், நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, ஆறாத வடு….. அவசியம் படிக்கப்பட்டு விவாதிக்கப் பட வேண்டியவைகளாகும். இந்த வரிசையில் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் முக்கியமானதாகும்.

ஈழ இனப்படுகொலைக்கு  காரணங்களை, விடைகளை முள்ளிவாய்க்காலுக்குள் மட்டும் தேடுவது கொல்லன் தெருவில் ஊசியை தொலைந்து விட்டு தேடுவதாகும்.  அல்லது யானையை பார்த்த குருடர்கள் கதையை போன்றதாகும்.  முள்ளிவாய்க்காலில் முடிந்த ஈழ படுகொலைக்கு கடந்த 50 ஆண்டு கால சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையையும், அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஈழவிடுதலை இயக்கங்களின் முழுமையானதொரு வரலாற்று பின்னணியை  தமிழர்கள் விளக்க கொள்ள வேண்டும்.  அதிலும் குறிப்பாக 1983 – 99 கால கட்டம் ஈழ வரலாற்றில்..தமிழக வரலாற்றிலும் மிகவும் முக்கியமானது.

ஒரு தனிமனிதனை, ஒரு குடும்பத்தை, ஒரு ஊரை, ஒரு தேசத்தை அமைதியின் பெயரால், அகிம்சையின் பெயரால், உதவியின் பெயரால் காந்தி என்று பெருமை பீற்றிக்கொள்ளும் இந்திய நாடு தனது இராணுவத்தை அனுப்பி மனித உரிமை மீறல்களை, போர்குற்றங்களை செய்த வரலாற்று சம்பவங்களின் புனைவு இது.  முள்ளவாய்க்கால் பேரவலத்திற்கு தொடக்கமாக பாரபரியமிக்க  ஈழதேசத்தின் விடுதலை இயக்கங்களை ஓடுக்க துணிந்து அடிபட்டு புறமுதுகிட்டு வந்த வரலாறு. வியட்நாமுக்கு பிறகு ஒரு சிறு தேசத்தின் விடுதலை இயக்கத்தின் உலகின் பெரிய இராணுவத்தை எப்படி தோற்கடிக்க முடிந்தது என்ற மக்கள்திரள் வரலாற்றை சொல்லும் புனைவு இது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *