பிரியாந்தியின் கவிதை( 69 இலட்சம் மக்களின் மன்னாதி மன்னர்)


அவர்களின் அரசன்
அல்லது
நவீன துட்டகைமுனு
அவர்கள் தமது யுகபுருஷரை
நந்திக்கடல் தீரத்திலிருந்து மீட்டுவந்தனர்
எல்லாளனின் தலையை
நடுவாகப் பிளந்து
வழிந்த குருதியை பூசி
மன்னன் தன்
குடுமியை முடிந்து கொண்டதாக உடனிருந்த ‘நந்தமித்ர’ கூறினார்
அவர்களின் வரலாற்றில்…
ஒப்பற்ற வீரர்கள் எப்போதும் ‘ருகுணு’வில் இருந்தே வருவதாக
மக்களும் நம்பினர்
ஆயிரமாண்டுத் தவத்தின் பேறென மந்திர உச்சாடனங்களின் முடிவில் தோன்றிய ரட்சகன் என
மக்கள் அவரை கொண்டாடினர்
வெல்ல முடியாத போரை வென்ற புகழ்
தலையின் பின் ஒளிவட்டமானது
முகமெங்கும் வெற்றியின் தேஜஸ்
பட்டாசுகளால் நகர்களை அதிர்வித்து தோற்றவர் வாயில் பாற்சோற்றை திணித்துத் தமது வெற்றியை கொண்டாடினர் மக்கள்
மறுபடி மறுபடி
பட்டாபிஷேகம் செய்வித்து
இறும்பூதெய்தினர்
மன்னர்
பார்க்கும் இடமெங்கும் விகாரைகள் முளைத்தன
தேரர்கள் சிரசில்
கிரீடங்கள் ஒளிர்ந்தன
தசாப்தம் நீண்ட
வேந்தரின் ஆட்சியில்
மூத்தோன் இளையோன்
புதல்வர்கள் இளவல்கள் என அரசரின் குலமோ
கிளைத்துத் தழைத்தது
கஜானா காலியானது
மன்னரின் பெட்டகங்கள் நிறைந்தன
தேசத்தை அவலம் சூழ்ந்தது
மக்கள் அனைத்தின் பொருட்டும் நீண்ட வரிசைகளில் நிறுத்தப்பட்னர்
எங்கும் பசி
பசி
ஒரு நாள் அரண்மனைக் கதவை உடைத்துத் திறந்தது
மக்கள்
தம் மன்னரை
மஞ்சத்திற்கடியிலும்
நிலவறையின் இரகசிய வழிகளிலும் தேடினர்
அவரின்
அங்கவஸ்திரங்களை வீசியும்
ஸ்நானக் கேணியில் குளித்தும் தம் கையாலாகாத அரசனை பரிகசித்தனர்
தோற்றவர் தரப்பின்
பல்லாயிரம் புத்திரர்களை
காணாமலாக்கியும்
நிர்வாணமாக்கியும் கொன்ற
தன் வீரப் புதல்வனைக் காணாது
தேடத்தொடங்கினார்
விஹாரமாதேவி
ஓடி ஒழிந்துகொண்டார்
‘நவீன துஷ்டகைமுனு’
69 இலட்சம் மக்களின்
மன்னாதி மன்னர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *