யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று’

சுகிர்தராணி கவிதை வரிகள் ‘செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது முகம் மறைத்துக் கடந்துவிடுவேன் அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் …

Read More

தலைப்பிலி கவிதை

அனைத்துலக பெண்கள் தினம் மார்ச் 8ஐ முன்னிட்டு ஊடறுவில் பல ஆக்கங்கள் வெளி வரவுள்ளன.   – விஜயலட்சுமி- (மட்டக்களப்பு) தோழி கேட்டுக் கொண்டாள் உன் தேசத்தின் துர்பாக்கியத்தை வடித்து விடு என்று… விடியும் வரை முயன்றேன் முடியும் என்று தோன்றவில்லை …

Read More

சிரிப்பு

சூரியகலா கருணாமூர்த்தி(மலேசியா)   இறந்துக் கொண்டிருந்த மனிதன் சிரித்தபடி இருந்தான் மரணத்தின் ஓலம் அவனின் செவியில் விழாமல் இருக்க – சத்தமாய் சிரித்தபடி இருந்தான். அவனைச் சுற்றி இருந்தவரின் சோகத்தை விரட்ட – பல் தெரிய சிரித்தபடி இருந்தான்தன் மனதிலிருந்த மரணபயம் …

Read More

தலைப்பிலி கவிதை

– நிலா மாணிக்கவாசகர்- கண்ணீருக்கு மாத்திரம் சொந்தக்காரியாகிவிட்டதால் என்னவோ, என் கண்கள் வேறு காட்சியை பார்க்க மறுக்கின்றன… கண்ணீரை துடைப்பேனா? பார்வை கொடுக்கும் கண்களையே அகற்றுவேனா? திரும்பி பார்க்ககூடாத காட்சி மட்டுமே இமை விளிக்கையில் தோன்றுகின்றதே கண்ணுள் காட்சி மாறுமென்றே… நடைபினமாய் …

Read More

தூக்கம்

-சலனி தலை முழுதிலும் அபரீதமான வலிகள் நரம்புக் கணுக்களின் அதிர்வுகளுக்குப் பிடிகொடுக்க முடியாது மருகுகிறது சிந்தனை களைப்பின் தாலாட்டு உயிர்முதல் வருட தூக்கம் தழுவிக் கொள்கிறது, ஒரு தேவதைபோல. கனவுகளுக்கான எந்த உத்தேசமுமில்லாத கண் சுழற்றல் அவ்வப்போதான துண்டுக் கணங்களில் சரிவதைப் …

Read More

:: பேய்களும் பூசாரிகளும் ::

சூரியகலா கருணாமூர்த்தி (மலேசியா) பேய்களுடன் ஆன எனது தொடர்பு பூசாரிகளுக்குப் பிடிப்பதில்லை. எனக்குப் பேய்கள் … முருங்கை மரத்தில் தொங்க கற்றுக்கொடுத்தன நடு நிசி இரவில் இஷ்டம் போல் சுற்றித்திரிய கற்றுக்கொடுத்தன அயல் உடலில் அன்னியம் இல்லாது ஊடுருவ கற்றுக்கொடுத்தன விரட்டு …

Read More

ஜீவிதம்

-யாழினி யோகேஸ்வரன்- நாட்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன கண்கள் சொருகிப் போயும் காதுகள் மூடப்பட்டும் கிடக்கின்றன விரல்களற்ற கைகள் எழுத்தைத் தொலைத்து தேடி அலைகின்றன கால்கள் கூட பாதை அறியாது இரவோடும் சேர்ந்தே நடக்கின்றன தசைகள் மிகப் பருத்ததாயும் வழிந்து தொங்குவதாயும் …

Read More